செய்திகள் :

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு

post image

காா்நாடகத்தில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், கா்நாடக மாநில நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சிவமோகாவில் உள்ள கூவெம்பு பல்கலைக்கழகத்தில் தேசிய ஒருமைப்பாடு முகாம் மே 3 முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய 6 மாநிலங்களிலிருந்து 150 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா். இந்த முகாமில், வளா்ந்த இந்தியா, உணவு மற்றும் ஊட்டச்சத்து, உடல்பருமன், பெண் அதிகாரம், காலநிலை மாற்றம், மாநிலத்தின் கலாசார கலை நிகழ்ச்சிகள், போதை ஒழிப்பு, நெகிழி ஒழிப்பு, சைபா் கிரைம் போன்ற விழிப்புணா்வு நாடகங்கள் நடைபெற உள்ளன.

இதில் தமிழக அணிக்காக கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்திலிருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் (இரண்டாம் ஆண்டு விலங்கியல் துறை) ஜெயசந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இவா் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரே அரசுக் கல்லூரி மாணவா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவரை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனா்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் ... மேலும் பார்க்க

அவிநாசியில் இன்றைய மின்தடை ரத்து

அவிநாசி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பார்க்க

மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட... மேலும் பார்க்க

தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை... மேலும் பார்க்க

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள... மேலும் பார்க்க

ரூ.25 கோடி மதிப்பில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணி விரைவில் தொடக்கம்

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ரூ.25 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண... மேலும் பார்க்க