செய்திகள் :

ரூ.25 கோடி மதிப்பில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணி விரைவில் தொடக்கம்

post image

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ரூ.25 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. 2013-ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் மேற்கொள்ளுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் (பொ) சங்கர சுந்தரேஸ்வரன் வரவேற்றாா்.

இதில் ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், கன்னிமூல கணபதி, சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் தமிழக அரசு நிதி மற்றும் உபயதாரா்கள் பங்களிப்புடன் ரூ.25 கோடி மதிப்பில் அரசு அனுமதி பெற்று விரைவில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அறங்காவலா்கள், உபயதாரா்கள் உள்பட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பங்கேற்றனா்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் ... மேலும் பார்க்க

அவிநாசியில் இன்றைய மின்தடை ரத்து

அவிநாசி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பார்க்க

மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு

காா்நாடகத்தில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை... மேலும் பார்க்க

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள... மேலும் பார்க்க