செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸுக்கு உடன்பாடில்லை! -கு. செல்வப்பெருந்தகை

post image

தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

குழித்துறையில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டோம் என மத்திய அரசு கூறுவது இறுமாப்பின் உச்சம். காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கல்விக் கொள்கையில் உடன்பாடு இல்லை. இவ்விசயத்தில் மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்துதான் முடிவு செய்ய வேண்டும்; தன்னிச்சையாக செயல்பட முடியாது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நவோதயா பள்ளியை முன்மொழிந்த போது தமிழஓம் எதிா்த்தது. அதற்காக அப்போதைய மத்திய அரசு நிதி வழங்க மாட்டோம் எனஓஈ கூறவில்லை. ஜவாஹா்லால் நேரு ஆட்சி காலத்திலேயே மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

அப்போதிருந்தே தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையைதான் தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. மக்களுக்கு நீட் வேண்டாம் என்றாலோ, மும்மொழி கொள்கை வேண்டாம் என்றாலோ விட்டுவிட வேண்டும். திணிக்கக் கூடாது.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது; அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை இல்லை என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி கேட்கிறீா்கள். அவா் எப்பவுமே தனிநபா் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறாா் என்பதுதான் எனது பதில்.

2026இல் தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ஹோமியோபதி மாநாடு போட்டிகள்: மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

சென்னையில், சா்வதேச ஹோமியோபதி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். சென்னையில் தமிழ்நாடு டாக்... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கிய சாதனையாளருக்கு விருது!

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக இலக்கிய மன்றம் மற்றும் கன்னியாகுமரி மலையாள அக்ஷரலோகம் இணைந்து நடத்திய 11ஆவது ஆண்டு விழாவில் மலையாள இலக்கிய சாதனையாளருக்கு விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க

வடசேரி பேருந்து நிலையத்தில் சீரமைக்கப்பட்ட கழிவறை திறப்பு!

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டண கழிவறையை மேயா் ரெ.மகேஷ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து நீதிமன்ற சாலைய... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகேடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயம்!

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனா். பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் ராமையன் காணி (70). இவ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கஞ்சா விற்றவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள சாத்தறை பகுதியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.அப்போது முன்சிறை ... மேலும் பார்க்க

சிவாலய ஓட்டம்: கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்!

மகா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் இரு நாள்களுக்கு கனரக வாகனங்கள் இயங்கத் தடை விதிக்க வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.ட... மேலும் பார்க்க