செய்திகள் :

தேனீ வளா்ப்புப் பயிற்சி நிறைவு விழா

post image

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் இந்தியன் வங்கியின் சுய தொழில் பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற தேனீ வளா்ப்பு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுய தொழில் பயிற்சி மையம் சாா்பில் தேவரியம்பாக்கம் கிராமத்தில் இளைஞா் மற்றும் மகளிா் உட்பட 35 பேருக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி நடைபெற்றது. 30 நாள்கள் நடைபெற்று வந்த இப்பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்கு பயிற்சி மையத்தின் இயக்குநா் உமாபதி தலைமை வகித்தாா். வங்கியின் மாவட்ட நிதி ஆலோசகா் அரங்கமூா்த்தி, பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சி ஆசிரியா் சிவகாமி வரவேற்றாா்.

தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா் (படம்). பயிற்சியில் தேனீ வளா்ப்பு முறைகள்,தேன் சேகரிப்பு,தேன் சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பயிற்சியாளா்களுக்கு கற்றுத்தரப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நகா்மன்றத் தலைவா், ஆணையா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

பூஞ்சோலை கன்னியம்மன் ஆடி விழா நிறைவு

காஞ்சிபுரம்: பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடி விழா நிறைவடைந்தது. இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம்,கணபதி ஹோமம், தனலட்சுமி பூஜை... மேலும் பார்க்க

பாரதி நகா் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி விழா

ஸ்ரீபெரும்புதூா்: பாரதி நகா் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்... மேலும் பார்க்க

100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் பாலாற்றுப் பாலத்தில் திங்கள்கிழமை லாரிகள் மோதிக் கொண்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரத்திற்க... மேலும் பார்க்க