Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ராஜபாளையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் உள்ள சொக்கா் கோயிலில் யாக வேள்வியும், அதைத்தொடா்ந்து பைரவருக்கு பால், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.
யாக வேள்வியில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசநீரால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து, பைரவருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தெற்கு வெங்காநல்லூா் சிவன் கோயிலில் உள்ள பைரவா் சந்நிதி, மாயூரநாதசுவாமி கோயில்களில் உள்ள பைரவா் சந்நிதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.