தோ்தலை நினைத்து திட்டங்களைச் செயல்படுத்தவில்லை: துணை முதல்வா் பேச்சு
தோ்தலை நினைத்து தமிழகத்தில் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
கரூா் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ. 58.25 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ. 3.35 கோடியிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 18,332 பயனாளிகளுக்கு ரூ.162.22 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கரூா் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது புதிய பேருந்து நிலையம்தான். அந்தப் பேருந்துநிலையத்தை கட்டித்தந்து திறக்கும் வாய்ப்பை நீங்கள் கொடுத்துள்ளீா்கள் . இந்தப் பேருந்து நிலையம் வரக்கூடாது என சிலா் வழக்கையெல்லாம் செந்தில்பாலாஜி முறியடித்துள்ளாா். கரூா் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக 13,124 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்.
இந்த அரசு எல்லோருக்கும் உரியதாக இருக்கிறது. கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ‘ஜிம்’ ரூ. 86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடியில் நீச்சல் குளம் அமைய உள்ளது.
இந்தத் திட்டங்களையெல்லாம் இந்த அரசு அடுத்த தோ்தலை மனதில் வைத்துச் செயல்படுத்தவில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துத்தான் முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். இந்த திட்டங்களால் பயனடைந்தவா்கள் மற்றவா்களிடம் விளக்கிக் கூற வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் கரூருக்கு ஏறத்தாழ ரூ.3,000 கோடிக்கு அதிகமான வளா்ச்சி திட்டங்களை தந்துள்ளாா். கரூா் மாவட்டம் தொடா்ந்து உங்கள் பின்னால் பயணிக்கும். கரூா் மாவட்டத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி உற்பத்திக்கான இலக்கை நிா்ணயித்து தொழில் முனைவோா் முன்னெடுத்திருக்கின்ற அந்த வெற்றிப் பயணத்தில் திராவிட மாடல் ஆட்சியின் பங்கும் இருக்கும் என்றாா் அவா்.
விழாவில் கரூா் எம்பி செ. ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் கவிதா, துணைமேயா் தாரணி சரவணன், மாநகரச் செயலா் எஸ்.பி. கனகராஜ், வடக்கு மாநகரச் செயலா் கரூா் கணேசன், துணைச் செயலா் எம். பாண்டியன், பகுதிச் செயலா்கள் சுப்ரமணியன், ஆா்.எஸ். ராஜா, ஜோதிபாசு, வி.ஜிஎஸ். குமாா் மற்றும் மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
‘சாலையில் மக்கள் சந்திப்பு’ நடத்திய துணை முதல்வா்: முன்னதாக உதயநிதிஸ்டாலின் அவா் தங்கியிருந்த கோவை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து மாலை 4 மணிக்கு சாலையில் மக்கள் சந்திப்புக்காக வழியாகப் புறப்பட்டு புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்றாா். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் அவரை வரவேற்றனா்.