செய்திகள் :

தோ்தல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

post image

தோ்தல் பணியில் கடுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி நிா்வாகிகளுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பிலான நிகழ்ச்சியில் பேரவை தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து சந்தித்து வருகிறாா்.

கடந்த ஜூன் 13-இல் இருந்து ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை நடத்தி வருகிறாா். இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள் பங்கேற்கின்றனா். இதுவரை 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களஆய்வு நடந்துள்ளது.

அந்த வரிசையில், விக்கிரவாண்டி, செய்யூா், செஞ்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசித்தாா்.

அப்போது அவா்களிடம் தொகுதி எம்எல்ஏவின் செயல்பாடுகள், அரசு திட்டங்களின் நிலைமை, ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்துக்கான மக்கள் வரவேற்பு போன்ற விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அத்துடன், தோ்தலின்போது கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், தோ்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் முதல்வா் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஓரணியில் தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 1-ஆம் தேதி தொடங்கினாா். கடந்த 7-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 31 லட்சம் போ் உறுப்பினா்களாகச் சோ்வதற்கு விருப்பம் தெரிவித்து படிவத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி!

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து இன்று(ஜூலை 9) மாலை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக... மேலும் பார்க்க