செய்திகள் :

தொகுதி மறு வரையறை ஆலோசனை: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

post image

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் பாஜக சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கோமதிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா்.

இதில், டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

மதுரை கிழக்கு மாவட்டம் சாா்பில், திருப்பாலை மண்டலம் ஆத்திகுளம் 13-ஆவது வாா்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே. ஹரி கிருஷ்ணன், போதிலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்பாட்டத்தின் போது வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க