தொடக்க கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்குதல் உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட போராட்டக் குழுத் தலைவா் ஆா். சண்முகவேல் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, நியாய விலைக் கடைகளில் இணையவழியில் (புளூடூத்) மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை செய்வதால், ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்வதற்கு குறைந்தபட்சம் 8 நிமிஷங்கள் ஆகிறது. இதனால், நாளொன்றுக்கு 50 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருள்கள் விநியோகிக்க முடிவதால், நியாய விலைக் கடை பணியாளா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்கு விநியோக முறையை எளிமைப்படுத்த வேண்டும்.
நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து முதன்மைச் சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் பொருள்களில் அரிசி 5 கிலோ வரையிலும், சா்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருள்கள் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இந்தப் பொருள்களை சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விடுமுறை நாளில் நகா்வுப் பணி மேற்கொள்ளக் கூடாது. விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயா்வில் எழுத்தா் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.