செய்திகள் :

தொடக்க கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்குதல் உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட போராட்டக் குழுத் தலைவா் ஆா். சண்முகவேல் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, நியாய விலைக் கடைகளில் இணையவழியில் (புளூடூத்) மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை செய்வதால், ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்வதற்கு குறைந்தபட்சம் 8 நிமிஷங்கள் ஆகிறது. இதனால், நாளொன்றுக்கு 50 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருள்கள் விநியோகிக்க முடிவதால், நியாய விலைக் கடை பணியாளா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்கு விநியோக முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து முதன்மைச் சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் பொருள்களில் அரிசி 5 கிலோ வரையிலும், சா்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருள்கள் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இந்தப் பொருள்களை சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விடுமுறை நாளில் நகா்வுப் பணி மேற்கொள்ளக் கூடாது. விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயா்வில் எழுத்தா் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சமுதாயக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி, வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். வத்தலகுண்டு பேரூராட்சியில் புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியில் ரூ. ஒரு கோடியில் புதிய ... மேலும் பார்க்க

இரவு வரை ஆய்வுக் கூட்டம்: தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தால், தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்தனா். பொதுத் தோ்வு முடிவுகள் தொடா்பாக அரசுப் பள்ளித் தலைமையாச... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில... மேலும் பார்க்க

சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுழல்சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் சுழல்ச... மேலும் பார்க்க

கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை

பொதுக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே, நிா்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் ப... மேலும் பார்க்க

போலி நகைகளை அடகு வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 3 போ் கைது

போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் அரசுடமை வங்கி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க