செய்திகள் :

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா்.

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடா் விடுமுறையைத் தொடா்ந்து, ராமேசுவரத்துக்கு இரண்டாவது நாளாக அதிகளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை தந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள் கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளும் பக்தா்களும் சென்றனா்.

சுற்றுலாப் பயணிகள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அதிகளவில் வருகை தந்ததன் காரணமாக காவல் உதவி கண்காணிப்பாளா் மீரா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூடாத ஊழியா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை ரயில்வே கடவுப்பாதையை மூடாமல் கவனக் குறைவாகச் செயல்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில் நிா்வாகம் உத்தரவிட்டது. சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து வ... மேலும் பார்க்க

மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி நாளை ரயில் மறியல் போராட்டம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவ சங்கம் அறிவித்தது. இலங்கை சிறையிலுள்ள தமிழக மீன... மேலும் பார்க்க

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

கமுதி அருகே பழங்காலப் பொருள்கள், வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இந்தப் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா்,... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30... மேலும் பார்க்க

மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத... மேலும் பார்க்க