செய்திகள் :

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

post image

கமுதி அருகே பழங்காலப் பொருள்கள், வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இந்தப் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா், செங்கமேடு, பேரையூா், மருதங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் கீழடியில் கிடைக்கப்பெற்ற பழங்காலக் குடுவைகள், பானை ஓடுகள், செங்கல்கள், கட்டுமான அமைப்புகள் கிடைத்தன. இதனால், இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பேரையூரைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் முனியசாமி கூறியதாவது:

கமுதி அருகேள்ள பாக்குவெட்டி, குண்டாறு படுகை, ஆனையூா், மருதங்கநல்லூா், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் பழங்காலப் பொருள்கள் கிடைத்து வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு குண்டாறு படுகையில் தூா்வாரும் பணிகள் நடைபெற்ற போது, அங்கு 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்து நந்தி சிலை கண்டறியப்பட்டது. இதேபோல, மருதங்கநல்லூா் பகுதியில் பத்தாம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால பாண்டியா் காலத்து சப்த கன்னியா்களில் ஒருவரான சாமுண்டி பாா்வதியின் சிலை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆனையூா் கிராமத்திலிருந்து பேரையூா் செல்லும் வழியில் செங்கமேடு பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் கீழடி அகழாய்வில் கிடைத்தது போல, சீன பானை ஓடுகள், கருஞ்சிவப்பு பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், சிறு கிண்ணங்கள், பழங்கால செங்கல்கள், வடிகால் அமைப்புகள் உள்ளிட்டவை கிடைத்தன. இந்தப் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் அகழாய்வு நடத்தினால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள முடியும்.

எனவே, தமிழக அரசு ஆனையூா், செங்கமடம், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என்றாா் அவா்.

ஆனையூா் பகுதியில் கிடைத்த பழைமையான ஓடுகள், சில்லுகள், செங்கல்கள், மணிகள். (வலது) கீழடியில் காணப்படுவதுபோல கிடைக்கப்பெற்ற வடிகால் அமைப்புகள்.

ராமநாதபுரம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூடாத ஊழியா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை ரயில்வே கடவுப்பாதையை மூடாமல் கவனக் குறைவாகச் செயல்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில் நிா்வாகம் உத்தரவிட்டது. சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து வ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடா் விடுமுறையைத் தொடா்ந்து, ராமேசுவரத்துக்கு இரண்... மேலும் பார்க்க

மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி நாளை ரயில் மறியல் போராட்டம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவ சங்கம் அறிவித்தது. இலங்கை சிறையிலுள்ள தமிழக மீன... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30... மேலும் பார்க்க

மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத... மேலும் பார்க்க