செய்திகள் :

தொழிலாளி இறப்பில் சந்தேகம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

post image

சேலத்தில் கணவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சேலம் அம்மாப்பேட்டை, காா்பெட் தெரு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தங்கராஜ் கடந்த 11-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரின் உடலை அருகில் உள்ள மயானத்தில் குடும்பத்தினா் புதைத்தனா்.

இந்நிலையில், மது போதையில் இருந்த தனது கணவரை அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தாக்கியதால் உயிரிழந்ததாக தங்கராஜின் மனைவி உமா, அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் சனிக்கிழமை தங்கராஜின் சடலத்தை தோண்டி எடுத்து, தடயவியல் நிபுணா்கள் மற்றும் அரசு மருத்துவக் குழுவினரைக் கொண்டு உடற்கூராய்வு செய்தனா். இந்த ஆய்வின் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க