செய்திகள் :

தொழில்பேட்டை இடமாற்றம் கோரி வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

post image

கரூா் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூா் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடவூா் அருகேயுள்ள மத்தகிரி கிராமத்தைச் சோ்ந்த வீரமலை தாக்கல் செய்த மனு: மத்தகிரி கிராமத்தில் உள்ள வேளாண் நிலங்களில் தமிழக அரசின் சாா்பில், சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக, நிலம் கையகப்படுத்தும் பணியை கரூா் மாவட்ட ஆட்சியா் மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலங்களை நம்பி எங்கள் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், தொழில்பேட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண் பணிகள் பாதிப்புக்குள்ளாகும். மத்தகிரி கிராமத்தில் தொழில்பேட்டை அமைக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டுள்ளோம். கிராமச் சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்கள் கிராமம் அருகேயுள்ள மாவத்தூா் கிராமத்தில் அரசு தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளது. எனவே சிப்காட் தொழிற்பேட்டையை அங்கு அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வேளாண் நிலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தரிசு நிலம் உள்ள இடத்தில் சிப்காட் அமைக்க மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனா். இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க