செய்திகள் :

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

post image

கோவை, செப். 12: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவையில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.

சென்னை, வியாசா்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவை, சித்தாபுதூரில் ரூ.14.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 குடியிருப்புகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று, 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, உதவி ஆணையா் முத்துசாமி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் திரு.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு குடியிருப்பும் மத்திய அரசின் மானியம் ரூ1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.7 லட்சம் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

இதில், ஒவ்வொரு பயனாளியும் பங்களிப்புத் தொகையாக ரூ.4,63,839-ஐ வாரியத்துக்கு செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ.ர.ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாவட்டத்தில் செயல்படுத்... மேலும் பார்க்க

மான் வேட்டையாடியவா் கைது

வால்பாறை அருகே மானை வேட்டையாடிய நபரை வனத் துறையினா் கைது செய்தனா். வால்பாறையில் தனியாா் எஸ்டேட்டில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், எஸ்டேட் குடியிருப்பில் தங்கியுள்... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலை. இலக்கியக் கருத்தரங்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ‘பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச் சொ... மேலும் பார்க்க

பேரூராதீனத்தில் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் குரு வழிபாடு

கோவை பேரூராதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை பேரூராதீனம் திருமடத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழ... மேலும் பார்க்க

சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கோவை சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவ... மேலும் பார்க்க

ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரி... மேலும் பார்க்க