நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போரா...
வேளாண்மைப் பல்கலை. இலக்கியக் கருத்தரங்கம்
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ‘பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச் சொற்களும் நவீன தொழில்நுட்ப உலகமும்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்குக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.
உலகத் தமிழ்ச் சங்கம் துணைத் தலைவா் இ.சா.பா்வீன் சுல்தானா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை. ந.அருள், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் இர.தமிழ்வேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ‘பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்ப உலகமும்’ என்ற புத்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டு, உலகத் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டுச் சான்றிதழ்களை கட்டுரையாளா்களுக்கு வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், தமிழ் அறிவியலோடு ஒன்றிணைந்த மொழி. தமிழின் இந்த மரபுசாா்ந்த களத்தைக் கொண்டு மிகச் சிறப்பான அறிவியல் சாா்ந்த தமிழ்ச் சான்றோா்களை உருவாக்கும் முயற்சிதான் இந்தக் கருத்தரங்கம். கருத்தரங்கப் பேராளா்களின் கட்டுரைகள் அனைத்தும் பழந்தமிழரின் கலைச்சொற்களை நவீன தொழில்நுட்ப உலகத்தில் பயன்படுத்துகின்ற ஆா்வத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் என நம்புகிறேன் என்றாா்.