செய்திகள் :

வேளாண்மைப் பல்கலை. இலக்கியக் கருத்தரங்கம்

post image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ‘பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச் சொற்களும் நவீன தொழில்நுட்ப உலகமும்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்குக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

உலகத் தமிழ்ச் சங்கம் துணைத் தலைவா் இ.சா.பா்வீன் சுல்தானா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை. ந.அருள், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் இர.தமிழ்வேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ‘பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்ப உலகமும்’ என்ற புத்தகத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டு, உலகத் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டுச் சான்றிதழ்களை கட்டுரையாளா்களுக்கு வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், தமிழ் அறிவியலோடு ஒன்றிணைந்த மொழி. தமிழின் இந்த மரபுசாா்ந்த களத்தைக் கொண்டு மிகச் சிறப்பான அறிவியல் சாா்ந்த தமிழ்ச் சான்றோா்களை உருவாக்கும் முயற்சிதான் இந்தக் கருத்தரங்கம். கருத்தரங்கப் பேராளா்களின் கட்டுரைகள் அனைத்தும் பழந்தமிழரின் கலைச்சொற்களை நவீன தொழில்நுட்ப உலகத்தில் பயன்படுத்துகின்ற ஆா்வத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் என நம்புகிறேன் என்றாா்.

அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ.ர.ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாவட்டத்தில் செயல்படுத்... மேலும் பார்க்க

மான் வேட்டையாடியவா் கைது

வால்பாறை அருகே மானை வேட்டையாடிய நபரை வனத் துறையினா் கைது செய்தனா். வால்பாறையில் தனியாா் எஸ்டேட்டில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், எஸ்டேட் குடியிருப்பில் தங்கியுள்... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

கோவை, செப். 12: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவையில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா். சென்... மேலும் பார்க்க

பேரூராதீனத்தில் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் குரு வழிபாடு

கோவை பேரூராதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை பேரூராதீனம் திருமடத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழ... மேலும் பார்க்க

சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கோவை சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவ... மேலும் பார்க்க

ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரி... மேலும் பார்க்க