செய்திகள் :

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலருக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நீண்டகாலமாகவே அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஆகையால், ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தனிப்பட்ட பாதுகாவலர்களும் எப்போதும் உடனிருப்பர்.

அந்த வகையில், சல்மான் கானின் பாதுகாவலரான ஷேரா என்றழைக்கப்படும் குர்மீத் சிங் என்பவர்தான் பெரிதும் நம்பிக்கை உடையவராகத் திகழ்கிறார். அவர்தான், சல்மான் கான் செல்லும் இடமெல்லாம் நிழல்போல பின்தொடர்கிறார்.

1995-லிருந்து சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கும் ஷேராவை, சல்மான் கானின் சகோதரரான ஷோஹைல் கான்தான் நியமித்தார்.

சல்மான் கான் எங்கு சென்றாலும், அவருக்கு முன்பாக ஷேரா சென்று, அவரின் பாதுகாப்பை உறுதி செய்கிறார். ஷேரா உடனிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக உணர்வதாகவும் சல்மான் கான் தெரிவிக்கிறார்.

ஷேராவுக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம் வழங்குவதுடன், அவருக்கு பல்வேறு சலுகைகளையும் சல்மான் கான் அளித்து வருகிறார். அவருக்கு ரூ.100 கோடிக்குமேல் சொத்து மதிப்பும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1.40 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரையும் ஷேரா வாங்கியிருந்தார்.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஷேரா, தனது பணிக்கு இடையூறாக இருப்பதாக தலைப்பாகை மற்றும் தாடியையும் சல்மான் கானுக்காக அகற்றியதுடன், அவருக்காக உடலில் துப்பாக்கி குண்டை ஏற்கவும் தயார் என்று ஷேரா கூறுகிறார்.

இதையும் படிக்க:இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு?

Salman Khan’s Bodyguard Shera Has Rs 100 Crore Net Worth

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார். பி... மேலும் பார்க்க

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்ட... மேலும் பார்க்க

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் ம... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க