செய்திகள் :

நமீபியா: ஒரு காலத்தில் செல்வ, செழிப்புடன் இருந்த 'வைர நகரம்'; இன்று மணலில் புதைந்தது எப்படி?

post image

நமீபியா நாட்டுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால், அந்த நாட்டின் வரலாறும், சுற்றுலா இடங்களும் பேசப்படத் தொடங்கியுள்ளது. இந்த பதிவில் நமீபியாவின் ஒரு முக்கியமான இடம் பற்றி தான் சொல்லபோகிறோம்.

என்கோல்மான்ஸ்காப் (Kolmanskop) என்ற இடம் ஒருகாலத்தில் வைரங்களால் செழித்த இடமாக இருந்தது, இன்று அதன் நிலை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

1900களின் தொடக்கத்தில் நமீபியாவின் நமிப் பாலைவனத்தில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஜெர்மனியர்கள் அங்கு குடியேறி கோல்மான்ஸ்காப் என்ற நகரை அமைத்தனர்.

அங்கு அழகான வீடுகள், மருத்துவமனை,பள்ளிக்கூடம்,மின் வசதி, சுத்தமான குடிநீர் இருந்தது.பாலைவனத்தில் இத்தனை வசதிகள் இருந்தது அதிசயமாகக் கருதப்பட்டது.

வைரங்கள் இல்லை – மக்கள் வெளியே

அப்போது வரை செழித்து இருந்த ஊர், வைர வளங்கள் குறையத் தொடங்கியவுடன் சீர்குலைந்தது. அதுமட்டுமில்லாமல் தெற்குப் பகுதியில் அதிக வைரங்கள் இருப்பது தெரிய வந்ததால், மக்கள் அங்கு சென்று விட்டனர்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஊர் முழுவதும் காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த ஊர், மெதுவாக அமைதியாகியும், தனிமையாகியும் மாறியது.

மணலில் புதைந்த நகரம்

கோல்மான்ஸ்காப் நகரம் நமிப் பாலைவனத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி மணல் காற்று வீசும்.பல ஆண்டுகளாக மக்கள் இல்லாததால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் மணல் மெதுவாக அங்கு இருந்த வீடுகளுக்குள் புகுந்து நகரத்தை முழுமையாக மூடியது

இன்று, இந்த ஊர் புகைப்படக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோரால் பார்வையிடப்படுகிறது.

நொடிப்பொழுதில் எங்கள் கண்முன்னே நடந்து முடிந்த விபத்து! - திசையெல்லாம் பனி- 6

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது! - முதல் ட்ரெக்கிங் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`Kadamakkudy' - ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அழகிய கேரள கிராமம்; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின், சமீபத்திய X பதிவு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. ”உலகின் அழகான கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் கேரளாவின் கடமக்குடி தீவுக்கூட்டத்திற்கு வர வ... மேலும் பார்க்க

இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் பெரிதாக பேசப்படாதது ஏன்? : ஓர் பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Flying Naked: 'இனி கம்மியான லக்கேஜ்தான்!' - விமானப் பயணிகளின் புதிய ட்ரெண்டு; பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் தற்போது ‘Flying Naked’ என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. விமானங்களில் பயணிக்கும்போது சிலர் தங்களின் உடைமைகளைக் குறைத்துக்கொண்டு பயணிக்கும் வீடியோக்களை #Flying Naked என்ற ஹாஷ்டேக்கில் ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு `11-A' சீட்டுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்; என்ன காரணம்?

கடந்த 12-ம் தேதி, குஜராத் அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி 787 போயிங் விமானம் ஒன்று பறந்தது. ஆனால், அது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவ கல்லூரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் ... மேலும் பார்க்க