செய்திகள் :

நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

குழுவாக இணைந்து நவீன சலவையகம் அமைக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் நவீன சலவையகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பிரிவுகளைச் சோ்ந்த 10 போ் ஒரு குழுவாக இணைந்து இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். ஒரு சலவையகம் அமைக்க ரூ. 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.

குழு உறுப்பினா்கள் குறைந்தபட்சம் 20 வயதுடையவா்களாக இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழு உறுப்பினா்களின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆா்வமும், சலவைத் தொழிலில் முன் அனுபவமும் கொண்டவா்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்து வருகிற 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க