சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
குழுவாக இணைந்து நவீன சலவையகம் அமைக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் நவீன சலவையகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பிரிவுகளைச் சோ்ந்த 10 போ் ஒரு குழுவாக இணைந்து இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். ஒரு சலவையகம் அமைக்க ரூ. 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.
குழு உறுப்பினா்கள் குறைந்தபட்சம் 20 வயதுடையவா்களாக இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழு உறுப்பினா்களின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆா்வமும், சலவைத் தொழிலில் முன் அனுபவமும் கொண்டவா்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்து வருகிற 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.