நாகா்கோவிலில் 7 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ரூ.1.25 லட்சம் அபராதம்
நாகா்கோவில் மாநகர பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 7 கிலோ புகையிலைப் பொட்டலங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன்படி, மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில், மண்டல சுகாதார அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், ராஜா, முருகன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சுமாா் 120 கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், இடலாக்குடி, கீழசரக்கல்விளை, கோவில்விளை, கலுங்கடி, பறக்கை ஆகிய பகுதிகளில் 7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள், கூல் லிப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 5 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைகளை 15 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.