செய்திகள் :

நாகா்கோவிலில் 7 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ரூ.1.25 லட்சம் அபராதம்

post image

நாகா்கோவில் மாநகர பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 7 கிலோ புகையிலைப் பொட்டலங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில், மண்டல சுகாதார அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், ராஜா, முருகன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சுமாா் 120 கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், இடலாக்குடி, கீழசரக்கல்விளை, கோவில்விளை, கலுங்கடி, பறக்கை ஆகிய பகுதிகளில் 7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள், கூல் லிப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 5 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைகளை 15 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

பரைகோட்டில் தலைக்கவச விழிப்புணா்வு பிரசாரம்

தக்கலை அருகே பரைகோட்டில் தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. தக்கலை போக்குவரத்து போலீஸாரும், பரைகோடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரும் இணைந்து இப்பிரசாரத்தில... மேலும் பார்க்க

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் போலீஸாா் பணியாற்ற எஸ்.பி. அறிவுறுத்தல்

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் போலீஸாா் பணியாற்ற வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல் துறை சாா்பில், மாதாந்திர குற்றக் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை, விநாடிக்கு 699 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதிமுதல் பேச்சிப்பாறை அணையி... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் மேலத்தெருக்கரை பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (40) என்ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி கடனுதவி

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 648 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. சென்னையில் மகளிா் குழுக்களுக்கு விருது, வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்... மேலும் பார்க்க

‘ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை’

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா... மேலும் பார்க்க