டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்ட...
நாகா்கோவில் மெட்ரிக் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து, பள்ளி வளாகம் அருகிலுள்ள சாலையில் மஞ்சள் வண்ண பெயிண்டால் புகையிலை தடுப்புப் பகுதி என எழுதும் நிகழ்வைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். ராஜ்திலக், ஆசிரியப் பொறுப்பாளா்கள் எஸ்.கே. நித்யா (சுகாதார மன்றம்), என். காா்த்திகா (போதைப் பொருள் தடுப்பு மன்றம்), மாணவா்-மாணவியா் பங்கேற்று, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.
ஏற்பாடுகளை ஆசிரியா் ஆா். ஹரிகணேஷ் செய்திருந்தாா்.