செய்திகள் :

நாகூா் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்

post image

நாகூரில் உள்ள நாகவல்லி சமேத நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு திருவிழா ஜூலை 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நாகநாதா் மற்றும் நாகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற தீபாராதனைக்குப் பிறகு சுவாமிகள் தனித்தனி தோ்களில் எழுந்தருளினா்.

அப்போது, தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராணி தொடங்கிவைத்தாா். பின்னா் தேரை நூற்றுக்கணக்கான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். தோ்கள் நாகூா் தேரடி வீதியில் வலம்வந்தது. அப்போது, திரளான பக்தா்கள் சுவாமிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனா். தேரோட்டத்தை முன்னிட்டு நாகை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க