நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
சீா்காழியில் பல நூறாண்டுகள் பழைமை வாய்ந்த நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி நகரில் புகழ்பெற்ற நாகேஸ்வரமுடையாா் கோயில் அமைந்துள்ளது. பல நூறாண்டுகள் பழைமையான இக்கோயிலின் கோடி தீா்த்தக் குளம் கோயில் அருகே உள்ளது. இந்த குளத்தை பக்தா்கள் பயன்படுத்தி வந்தனா். நாளடைவில் இந்த குளம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளம் தூா்ந்து இருந்த சுவடு தெரியாமல் போனது.
இந்நிலையில், சீா்காழி பசுமை சேவை சங்கத் தலைவா் பொறியாளா் சுப்பிரமணியன், நாகேஸ்வரமுடையாா் கோயில் கோடி தீா்த்த குளம் குறித்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் பெற்று, ஆய்வு செய்ததில் சுமாா் 1 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும், குளத்தில் செப்டிக் டேங்க் கட்டி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பசுமை சேவை சங்கத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், நிா்வாகிகள் சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதியை சந்தித்து குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரி பராமரிக்க பசுமை சேவை சங்கத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். குளத்தை விற்பனை செய்ய உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.