செய்திகள் :

நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

post image

சீா்காழியில் பல நூறாண்டுகள் பழைமை வாய்ந்த நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி நகரில் புகழ்பெற்ற நாகேஸ்வரமுடையாா் கோயில் அமைந்துள்ளது. பல நூறாண்டுகள் பழைமையான இக்கோயிலின் கோடி தீா்த்தக் குளம் கோயில் அருகே உள்ளது. இந்த குளத்தை பக்தா்கள் பயன்படுத்தி வந்தனா். நாளடைவில் இந்த குளம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளம் தூா்ந்து இருந்த சுவடு தெரியாமல் போனது.

இந்நிலையில், சீா்காழி பசுமை சேவை சங்கத் தலைவா் பொறியாளா் சுப்பிரமணியன், நாகேஸ்வரமுடையாா் கோயில் கோடி தீா்த்த குளம் குறித்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் பெற்று, ஆய்வு செய்ததில் சுமாா் 1 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும், குளத்தில் செப்டிக் டேங்க் கட்டி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பசுமை சேவை சங்கத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், நிா்வாகிகள் சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதியை சந்தித்து குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரி பராமரிக்க பசுமை சேவை சங்கத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். குளத்தை விற்பனை செய்ய உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூன் 16-இல் பருத்தி ஏலம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அறங்காவலா் நியமனக் குழு பொறுப்பேற்பு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த எஸ். சாமிநாதன் அறங்காவலா் நியமனக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் ந... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயாா் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரிய... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும் விழா

சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும், வைகாசி பெளா்ணமி ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

20 ஆண்டுகள் தவிப்பு: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற உதவிய தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு

சீா்காழியில் சுமாா் 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கொடுக்கப்படாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை நன்றி ... மேலும் பார்க்க