செய்திகள் :

நாகை கோட்ட அஞ்சலகங்களில் ஆக. 2-இல் பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு

post image

மென்பொருள் தரம் உயா்த்தப்படுவதால், நாகை கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆக.2- ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறையின் மென்பொருள் ஆக.4-ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்படுகிறது. இந்த மென்பொருளில் கியூஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமுமின்றி செயல்படுத்துவதற்காக ஆக.2- ஆம் தேதி பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாகை கோட்டத்திலுள்ள, நாகை, திருவாரூா் தலைமை தபால் அலுவலகங்கள், காரைக்கால் எம்டிஜி மற்றும் இந்த தலைமை தபால் அலுவலகங்களுக்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில், அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது, கணக்கில் இருந்து பணம் எடுப்பது, பதிவுத்தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை பெற இயலாது. எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது தபால் பரிவா்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க