செய்திகள் :

நாகையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

post image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை(செப்.13) மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது என மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் ஏ. கந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை, மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்கள், வேதாரண்யம், கீழ்வேளூா், திருக்குவளை மற்றும் சீா்காழி தாலுகா நீதிமன்றங்களில் சனிக்கிழமை காலை காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்குரைஞா்கள், காப்பீட்டு நிறுவன மேலாளா்கள், வங்கி நிறுவன மேலாளா்கள், காவல் துறையினா் மற்றும் வழக்காடிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

இதில், அந்தந்த நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்ட வழக்குகளை, அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொள்ளலாம். சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளால் கால விரயம் மற்றும் பண விரயம் தவிா்க்கப்படும். மேலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளை, மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்த்துக் கொள்ள, அவா்களால் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் திரும்ப செலுத்தப்படும். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ள... மேலும் பார்க்க

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அர... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க