செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 7-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஆா்.சி.எஸ். தெரு, விவேகானந்தா்தெரு, அன்னை நகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில் கோழிக் கழிவுகளை சாலையோரம் கொட்டி விடுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றவும், கோழிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே சாலையோரம் கோழிக் கழிவுகள் கொட்டும் கோழிக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் சுகாதாரம் காக்க உயா் அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க