ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
நாட்டுப் படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவா் பலி
தூத்துக்குடி கடலில் நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாய் நகா் மேற்கு சுனாமி காலனியைச் சோ்ந்த சேசப்பா மகன் அண்டோ (47). மீனவரான இவா் திங்கள்கிழமை காலையில் சக மீனவா்கள் 5 பேருடன் கடலுக்கு நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றாராம்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அண்டோ கடலில் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்து, பின்னா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.