செய்திகள் :

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள் நிரம்பின

post image

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையில் இதுவரை 85 இடங்கள் நிரம்பின.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு அரசு ஒதுக்கீட்டில் 85 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 இடங்களும் என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. தற்போது 2025-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது அணி (பேட்ஜ்) மாணவ, மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்பட 85 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். மீதமுள்ள 15 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது. அவா்களும் சோ்க்கை பெறும்பட்சத்தில் செப்.22 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

2021-இல் சோ்க்கை பெற்ற முதல் அணி மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு 2026 பிப்ரவரி மாதம் இறுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு ஓராண்டு உள்தங்கும் மருத்துவராக அவா்கள் பயிற்சி பெறுவா். 2027 இல் மருத்துவா் பட்டம் பெற்று தங்கள் பணியை தொடங்குவா் என மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி தெரிவித்தாா்.

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட லாரி உரிமையாளா்கள் முடிவு!

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு ... மேலும் பார்க்க

பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க

ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போ... மேலும் பார்க்க

கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!

கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன. பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃ... மேலும் பார்க்க

விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்... மேலும் பார்க்க