செய்திகள் :

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

post image

நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு செப். 15-இல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை மற்றும் அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவுற்றதையடுத்து வருஷாபிஷேக விழா, சங்காபிஷேக விழா திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு, காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா... மேலும் பார்க்க

‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் ம... மேலும் பார்க்க

எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

நாமக்கல் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 19.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 19.81 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை வழங்கினாா். இதில... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞரின் உதவியாளா் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் வழக்குரைஞரின் உதவியாளரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க