செய்திகள் :

நாமக்கல்லில் 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்

post image

நாமக்கல்லில் மூன்று குடிசை வீடுகள் புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே மேட்டுத் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகள் உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் அங்குள்ள மூன்று குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினா். அதற்குள் குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. வெள்ளையம்மாள், பாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இந்த வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மூன்று வீடுகளிலும் எரிவாயு உருளைகள் இல்லாததும், அந்த வேளையில் யாரும் அங்கு இல்லாததால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது. தீ விபத்தில் வீட்டில் இருந்த தானியங்கள், மின்னணு பொருள்கள் அனைத்தும் கருகின.

இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தீ விபத்தில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டவும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவும் உரிய நிதியுதவியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க