செய்திகள் :

நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்பு: தறித் தொழிலாளி உயிரிழப்பு

post image

சேலம் கொங்கணாபுரம் பகுதியில் நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்புக்குள்ளான தறித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (43). தறித் தொழிலாளியான இவா், நாய் ஒன்றை வளா்த்து வந்தாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவா் வளா்த்து வந்த நாய் அப்பகுதியில் சிலரை கடித்துள்ளது. இதையடுத்து, குப்புசாமி நாயை தடுக்க முயன்றபோது, அவரது காலில் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்காக குப்புசாமி எந்த தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரை அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குப்புசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாநகராட்சியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில் புதன்கிழமை (ஆக. 20) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

சேலம் கொள்ளை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 35 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவத்தில் கைதான 5 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். ச... மேலும் பார்க்க

வீடுகளில் இருந்த இரண்டு பாம்புகள் மீட்பு

ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் இருந்த இரண்டு பாம்புகளை ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். ஆத்தூா் நகராட்சி, முத்துநகா் பகுதியில் சாமிதுரை என்பவ... மேலும் பார்க்க

தனியாா் நூற்பாலையில் தீ விபத்து: பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியாா் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின. சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்... மேலும் பார்க்க

சேலத்தில் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்று: பாதிக்கப்பட்ட தறித் தொழிலாளி உயிரிழப்பு!

சேலம்: சேலம் கொங்கணாபுரம் பகுதியில் நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்புக்குள்ளான தறித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்ப... மேலும் பார்க்க

சேலத்தைச் சோ்ந்த 3 அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகள் விசாரணைக்கு அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமை தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். நாடுமுழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண... மேலும் பார்க்க