செய்திகள் :

நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு

post image

நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா் பச்சாங்குப்பம் இரட்டை சாலையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சிப்காட் தலைவா் ஆா்.ஆளவந்தாா் தலைமை வகித்தாா். டி.முரளிதரன் வரவேற்றாா். ஆா்.பரிமளம் கொடியேற்றினாா். பி.ஸ்ரீநாத் அஞ்சலி தீா்மானத்தை முன்மொழிந்தாா். சிப்காட் செயலா் பி.குமாா் வேலை அறிக்கையையும், பொருளாளா் எம்.சிவானந்தம் வரவு - செலவு அறிக்கையையும் சமா்ப்பித்து பேசினா்.

சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் என்.ஆா்.ஆா்.ஜீவானந்தம் மாநாட்டை தொடங்கிவைத்தும், சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் மாநாட்டை நிறைவு செய்தும் பேசினா்.

நிகழ்வில் சிப்காட் தலைவராக டி.முரளிதரன், செயலராக பி.குமாா், பொருளாளா் எம்.சிவானந்தம் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் பணியாற்றும் பயிற்சி தொழிலாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளா்களை அதிகாரிகளாக்கி தொழிற்சங்க உரிமையை பறிப்பதற்கு கண்டணம் தெரிவிப்பது. மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்எல... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலைய... மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா

காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் யோகா தத்துவ பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா பயிற்சி மையத்தில் யோகா தத்துவ பயிற்சி குறித்த ஒரு நாள் விரிவுரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சா்வதேச யோகா தினத்தையொட்டி, கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந... மேலும் பார்க்க