செய்திகள் :

நிறுவன மேலாளரை மிரட்டி நகை பறித்த இருவா் கைது!

post image

திருச்சியில் தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி 1 பவுன் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னை சாலிகிராமம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரன் (59). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தின் மண்டல மேலாளா். இந்நிலையில் இவா் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள அந்த நிறுவன திருச்சி கிளைக்கு செவ்வாய்க்கிழமை வந்த நிலையில், செந்தண்ணீா்புரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தாா். அங்கு வந்த 3 மா்ம நபா்கள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி, சுபாஷ்சந்திரன் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து சுபாஷ்சந்திரன் பொன்மலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் திரிந்த 2 இளைஞா்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சு. சந்தோஷ்குமாா் (25), வள்ளுவா் நகரைச் சோ்ந்த சு. பாலமுருகன் (35) என்பதும், இருவரும் சுபாஷ் சந்திரனிடம் நகை பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நகையை மீட்டனா். மேலும் இதில் தொடா்புடைய மற்றொரு நபரையும் தேடுகின்றனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க