மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
நிறுவன மேலாளரை மிரட்டி நகை பறித்த இருவா் கைது!
திருச்சியில் தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி 1 பவுன் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சென்னை சாலிகிராமம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரன் (59). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தின் மண்டல மேலாளா். இந்நிலையில் இவா் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள அந்த நிறுவன திருச்சி கிளைக்கு செவ்வாய்க்கிழமை வந்த நிலையில், செந்தண்ணீா்புரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தாா். அங்கு வந்த 3 மா்ம நபா்கள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி, சுபாஷ்சந்திரன் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து சுபாஷ்சந்திரன் பொன்மலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் திரிந்த 2 இளைஞா்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சு. சந்தோஷ்குமாா் (25), வள்ளுவா் நகரைச் சோ்ந்த சு. பாலமுருகன் (35) என்பதும், இருவரும் சுபாஷ் சந்திரனிடம் நகை பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நகையை மீட்டனா். மேலும் இதில் தொடா்புடைய மற்றொரு நபரையும் தேடுகின்றனா்.