செய்திகள் :

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்! நள்ளிரவில் 67 பேரின் உயிரை காப்பாற்றிய ‘குட்டி ஹீரோ’ !

post image

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான கிராமத்தில் 67 பேரின் உயிரை நாய் ஒன்று காப்பாற்றிய அதிசய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமயமலைத் தொடர்களில் பெய்துவரும் பருவமழை வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி, வடக்குப் புற மாநிலங்கள் முழுவதையும் பாடாய்படுத்தி வருகிறது.

ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் பெய்துவரும் பருவமழையால், நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளால் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கனமழையால் பெரும் பேரழிவு ஏற்பட்டு ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் 23 முறை வெள்ளப்பெருக்கும், அதைத் தொடர்ந்து 19 முறை மேக வெடிப்பு சம்பவங்களும், 16 முறை நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. திடீர் வெள்ளத்தால் மண்டியில் 156 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நாய்க்குட்டி ஒன்று சரியான நேரத்தில் குரைத்ததால், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மண்டியின் தரம்பூர் பகுதியில் உள்ள சியாத்தி கிராமத்தில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 1 மணி வரை பெய்த கனமழையால், அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய பலரின் வீடுகள் தரைமட்டமாகின.

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சியாத்தி பகுதியைச் சேர்ந்த நரேந்திரா என்பவர் கூறும்போது, “வீட்டில் இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த எங்களது நாய், மழை பெய்யத் துவங்கியதும் சத்தமாக குரைக்கத் தொடங்கியது. மேலும், தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டே இருந்தது.

நாய் குரைப்பது கண்டு எழுந்த நான், என்ன ஆனது என பார்க்கச் சென்றேன். அப்போது, வீட்டின் சுவரில் பெரிய விரிசல் ஏற்பட்டு மழை தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தது. உடனே நாய்யைத் தூக்கி கொண்டு கீழே இறங்கி, அங்கு தூங்கிக் கொடிருந்தவர்களை எல்லாம் எழுப்பினேன்” என்றார்.

அங்கிருந்த கிராம மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் தப்பித்தவர்கள் திரியாம்பாலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் கடந்த 7 நாள்களாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

7 நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், நிலச்சரிவில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய சம்பவத்தில் ஒரே இரவில் மிகப் பெரிய பிரபலம் ஆகியிருக்கிறது அந்த நாய்க்குட்டி.

Dog's Bark Saves 67 Lives As Monsoon Wipes Out Village In Himachal's Mandi

இதையும் படிக்க :கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன்!

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க