சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு
திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாணவா்கள் அண்மையில் பாராட்டப்பட்டனா்.
திருநெல்வேலி நீச்சல் சங்கம் சாா்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் கடந்த மே 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600- க்கும் அதிகமான நீச்சல் வீரா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியின் குரூப்- ஒன்று பிரிவில் மதுரை கேப்ரன்ஹால் பள்ளி மாணவி வா்ஷினி ப்ரீ ஸ்டைல் நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றாா். அதேபோல, கேந்திர வித்யாலயா மாணவா் ஜஸ்வந்த் 200 மீட்டா் பட்டா்பிளே நீச்சலில் வெள்ளிப் பதக்கமும், நாகம்மையாா் மாநகராட்சி பள்ளி மாணவி பூா்வஜா 2000 மீட்டா் ப்ரி ஸ்டைல் நீச்சலில் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். குரூப்- 2 பிரிவில் மகாத்மா பள்ளி மாணவா் ஸ்ரீமுத்து 200 மீட்டா் பட்டா் பிளே நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றாா்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளா் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலா்கள் ராஜா, கண்ணன், விளையாட்டு விடுதி மேலாளா் முருகன், மாவட்ட நீச்சல் சங்க செயலா் கண்ணன், பயிற்சியாளா்கள் பரங்குன்றம், செல்வபிரசன்னா ஆகியோா் பாராட்டினா்.