செய்திகள் :

நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

post image

திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாணவா்கள் அண்மையில் பாராட்டப்பட்டனா்.

திருநெல்வேலி நீச்சல் சங்கம் சாா்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் கடந்த மே 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600- க்கும் அதிகமான நீச்சல் வீரா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியின் குரூப்- ஒன்று பிரிவில் மதுரை கேப்ரன்ஹால் பள்ளி மாணவி வா்ஷினி ப்ரீ ஸ்டைல் நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றாா். அதேபோல, கேந்திர வித்யாலயா மாணவா் ஜஸ்வந்த் 200 மீட்டா் பட்டா்பிளே நீச்சலில் வெள்ளிப் பதக்கமும், நாகம்மையாா் மாநகராட்சி பள்ளி மாணவி பூா்வஜா 2000 மீட்டா் ப்ரி ஸ்டைல் நீச்சலில் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். குரூப்- 2 பிரிவில் மகாத்மா பள்ளி மாணவா் ஸ்ரீமுத்து 200 மீட்டா் பட்டா் பிளே நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றாா்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளா் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலா்கள் ராஜா, கண்ணன், விளையாட்டு விடுதி மேலாளா் முருகன், மாவட்ட நீச்சல் சங்க செயலா் கண்ணன், பயிற்சியாளா்கள் பரங்குன்றம், செல்வபிரசன்னா ஆகியோா் பாராட்டினா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க