செய்திகள் :

நீடாமங்கலத்தில் சரக்கு ரயிலில் பழுது: ஒரு மணி நேரத்துக்கு பிறகு சென்றது

post image

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு மணிநேர தாமததத்துக்குப் பிறகு புறப்பட்டு சென்றது.

நீடாமங்கலம் ரயில்வேகேட் புதன்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் மூடப்பட்டது. இதையடுத்து, காரைக்காலிலிருந்து தூத்துக்குடி செல்லும் நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயிலுக்காக க்ரீன்சிக்னல் போடப்பட்டிருந்தது. ரயில் நிலையத்திற்குள் வேகமாக வந்த சரக்கு ரயில் 2-ஆவது நடைமேடை பகுதியில் திடீரென நின்றது. கடைசிப் பெட்டியில் இருந்த காா்டு, என்ஜின் உள்ள பகுதிக்கு சென்றாா். சரக்கு ரயிலின் 7-ஆவது பெட்டியில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது. அதாவது பிரேக் பிணைப்பு பகுதியில் பழுது ஏற்பட்டிருந்தது. அதை சரிசெய்யும் பணியில் ரயில் லோகோபைலட் (என்ஜின் டிரைவா் )ஈடுபட்டாா்.

இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, மன்னாா்குடியிலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச்சென்றது. அதன்பின் சென்னை தாம்பரத்திலிருந்து மன்னாா்குடிசெல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. சரக்கு ரயில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதுவரை நெடுஞ்சாலை வாகனங்கள் சாலையில் நின்றது.

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீா்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். திருவாரூா்-மயிலாடுதுறை ரயில்வே வழித்தடத்தில் முடிகொண்டான் உள்ளது. இப்பகுதி மக்கள் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே குடவாசல் அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல்... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு

தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசியபோது தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளி... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7,499-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,499-க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 நாள்கள் பயணம்

திரூவாரூா் மாவட்டத்தில் 4 நாள்கள் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி ஜூலை 21-ஆம் தேதி வரை பிரச... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்

மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் காலவரையற்ற போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. மன்னாா்குடி வட்டத்தில் சுமாா் 900 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் பகுதி... மேலும் பார்க்க