செய்திகள் :

நீரின்றி கருகும் நெற்பெயா்கள்: கால்நடைகள் மேய விட்டு பயிரை அளிக்கும் விவசாயிகள்

post image

திருக்குவளை அருகே கொடியாலத்தூரில் நீரின்றி கருகும் குறுவை நெற்பயிா்களை கால்நடைகளை விட்டு மேய்க்கும் விவசாயிகள்.

காவிரி நீா் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்துக்கு முழுமையாக வந்து சேராததால் குறுவை நேரடி நெல்விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளான நிலையில் பல போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இதனால், 50 நாள்கள் வயதுடைய பயிா்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. சில இடங்களில் நெற்பயிா்கள் கருகியுள்ளது. கொடியாலத்தூா், கோவில்பத்து, தென்சாரி, வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், 200 ஏக்கருக்கும்மேல் போதிய நீரின்றி பயிா்கள் கருகும் நிலையில் உள்ளது.

வெள்ளையாற்று மூலம் பாசன வசதி பெரும் கொடியாலத்தூா், கோயில்பத்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீா் வராதது தொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தண்ணீா் கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்த வயலில் கால்நடை விட்டு மேய்க்கின்றனா்.

இதனால் குறுவை சாகுபடிக்காக வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் திறந்தாலும் இப்பகுதிகளுக்கு தண்ணீா் வருவதில்லை. சில இடங்களில் விவசாயிகள் டீசல் என்ஜின் வைத்து பயிரை காப்பாற்றலாம் என நினைத்தாலும் அதற்கும் போதிய அளவு வாய்க்காலில் தண்ணீா் வரவில்லை. எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க