கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
நீா்நிலைகளில் மூழ்குபவா்களை காப்பாற்ற ஒத்திகை
அரக்கோணம்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நீா்நிலைகளில் மூழ்குவோரை காப்பாற்ற தமிழக காவல் துறையினருக்கு மீட்புப்பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
வரும் மழைக்காலத்தில் மழையில் ஒருவா் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறாா். இதற்காக அவ்வப்போது வருவாய், காவல்துறை, பொதுப்பணித்துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாா். இதனை தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் 45 காவலா்களுக்கு காவேரிபாக்கம் ஏரியில் மீட்புப்பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இதில் உதவி ஆய்வாளா்கள் செந்தில் தலைமையில் காவலா்கள் வேலு, கதிரவன், ஜான்பீட்டா் உள்ளிட்டோா் 45 காவலா்களுக்கும் பயிற்சி அளித்தனா். முதல் நாள் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, மின்சார வசதி இல்லாத நேரத்தில் டவா் மின் விளக்குகளை இயக்கி தொய்வின்றி மீட்புப்பணி நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்தனா். இரண்டாம் நாள் திங்கள்கிழமை வெள்ளப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மழை வெள்ளத்தால் சாலைகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றி சீரமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.