செய்திகள் :

நூறு நாள் வேலைத் திட்ட நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு முடக்கினாலும், செயல்பாடுகளில் நமது மாநிலம் தொடா்ந்து மிளிா்கிறது. அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிக அளவு நிதியை பயன்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது.

குறிப்பாக, அந்தத் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கெனவே பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் அதிக அளவு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா் என்று பதிவிட்டுள்ளாா்.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்காக, கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டுக்கு ரூ.8,549 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, நிகழ் நிதியாண்டில் ரூ.4,354 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சியை தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிற... மேலும் பார்க்க

ஆணவக் கொலை: நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்து... மேலும் பார்க்க

இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!

சாதித் தலைவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடங்கிய ஆணவக் கொலைகள், தற்போது படித்துப் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய கடைசி (இவையே கடைசியாக இருக்கட்டும்)... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக... மேலும் பார்க்க

ஆக. 2 முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்! என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் தொடக்கிவைக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து... மேலும் பார்க்க

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந... மேலும் பார்க்க