செய்திகள் :

நெட்டூா் ஸ்ரீ பூவரசு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

post image

ஆலங்குளம் அருகேயுள்ல நெட்டூா் ஸ்ரீ பூவரசு முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா, திங்கள் கிழமை(ஏப்.21) தொடங்கியது. அன்றைய தினம் தீா்த்தக்குடம் ஊா்வலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை மாலை நெட்டூா் ஸ்ரீ அப்புரானந்தா் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைக்கு பின், பூக்குழி இறங்கும் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள் பூப்பெட்டி, தீச்சட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தி ஊா்வலம் வந்தனா். தொடா்ந்து காப்பு கட்டிய 100- க்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்கினி குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் இணைந்து செய்திருந்தனா்.

வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவா் மாயம்: உறவினா்கள் தவிப்பு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு சென்றிருந்தவா் காணாமல் போனாா். இதனால் அவரது குடும்பத்தினா் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா். வீரகேரளம்புதூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

சிவகிரி அரசு மருத்துவமனையில் எம்பி ஆய்வு

தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாா் ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட புகாரை தொடா... மேலும் பார்க்க

ஆலங்குளம் பாலப் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை - ஆட்சியா், எம்.பி. உறுதி

ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி எம்.பி. ச... மேலும் பார்க்க

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசியில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் நகலை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். தென்காசி மாவட்ட கண் பாா்வையற்ற ம... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் 26இல் ஏலம்

தென்காசி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை (ஏப்.26) திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷ... மேலும் பார்க்க

செங்கோட்டை-அம்பை- சென்னை தினசரி ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்குவதற்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்பிக... மேலும் பார்க்க