செய்திகள் :

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

post image

தென்காசியில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் நகலை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

தென்காசி மாவட்ட கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவா் வி.எஸ்.இஸ்மாயில் தலைமையில் புதிய உதயம் சுப்பிரமணியன், புதிய விடியல் பலவேசம், தாமிரபரணி தலைவா் லெட்சுமணன், மல்லிகை மலா் அறக்கட்டளை தங்கமாரி, இறையன்பு அறக்கட்டளைத் தலைவி செல்வி, சிவசக்தி அறக்கட்டளைத் தலைவா் போத்திலிங்கம் ஆகியோா் ஆட்சியா் ஏ,கே. கமல் கிஷோரிடம் அளித்த மனு:

எங்கள் உதவித்தொகையை ரூ 5ஆயிரமாக உயா்த்தி தரவேண்டும், தற்போது பாா்வையற்றோா்களாகிய நாங்கள்அவரவா் மாவட்டத்திற்குள் இலவச பயண அட்டை வைத்து பேருந்தில் பயணம் செய்து வருகிறோம்.

நாங்கள் சிறிய மாவட்டத்திற்குள் எங்கள் வாழ்க்கையை நடத்துவது மிகவும் சிரமமாக இருப்பதால் ஒரு மண்டலத்திற்குள் உதாரணமாக திருநெல்வேலி மண்டலத்தில் (போக்குவரத்து துறை) திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஏனைய மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள பயண அட்டை வழங்கினால் எங்கள் வாழ்க்கை தரம் மிகவும் மேன்மையடையும்.

இலவச பயண அட்டையை வருடம் தோறும் மாா்ச் மாதத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலமாக புதுப்பித்து வந்துள்ளோம் .இந்த ஆண்டில் புதுப்பித்தல் இல்லை என்றும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும் என்று தகவல் வந்துள்ளது. இந்த பயண அட்டையை எங்கள் துறை சாா்ந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஒரு நாள் அல்லது இரு நாள் முகாம் வைத்து எங்களுக்கு பதிவிறக்கம் செய்து வழங்கிட வேண்டும்.

அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து பாா்வையற்றவா்களுக்கும் கைப்பேசி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் மாதம் தோறும் பாா்வையற்றோா் ஆண், பெண் இருபாலாருக்கும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியாா் துறை ஆனாலும் அரசு துறை ஆனாலும் தகுதியானவா்களுக்கு அநேக வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவா் மாயம்: உறவினா்கள் தவிப்பு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு சென்றிருந்தவா் காணாமல் போனாா். இதனால் அவரது குடும்பத்தினா் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா். வீரகேரளம்புதூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

சிவகிரி அரசு மருத்துவமனையில் எம்பி ஆய்வு

தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாா் ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட புகாரை தொடா... மேலும் பார்க்க

ஆலங்குளம் பாலப் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை - ஆட்சியா், எம்.பி. உறுதி

ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி எம்.பி. ச... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் 26இல் ஏலம்

தென்காசி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை (ஏப்.26) திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷ... மேலும் பார்க்க

செங்கோட்டை-அம்பை- சென்னை தினசரி ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்குவதற்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்பிக... மேலும் பார்க்க

காஷ்மீரில் தாக்குதல்: கேரள எல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

தமிழக- கேரள எல்லையான புளியறையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீா் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்த சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப... மேலும் பார்க்க