செய்திகள் :

நெல்லை அருகே விபத்தில் பலியான மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

post image

திருநெல்வேலி அருகே விபத்தில் பலியான மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

மானூா் அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகள் கலைச்செல்வி (19). கல்லூரி மாணவியான இவா், கடந்த 1 ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்தாராம். பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இருப்பினும் அவரது கருவிழிகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினா் தாமாக முன்வந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா். இதையடுத்து கலைச்செல்வியின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வா் ரேவதிபாலன், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அம்பேத்கா் நகரில் கூடுதலாக 400 குடியிருப்புகள்: ஆட்சியரிடம் மக்கள் மனு

பாளையங்கோட்டை டாக்டா் அம்பேத்கா் நகரில் கூடுதலாக 400 குடியிருப்புகள் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் ஆதித்தமிழா் முன்னேற்ற கழகத்தினா் மற்றும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் கொன்று புதைப்பு: 4 போ் கைது

திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் கொலை செய்து புதைக்கப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம், குருநாதன் கோயில் பகுதியில் இளைஞா் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியின் மனுவுக்கு உடனடி தீா்வு கண்ட ஆட்சியா்

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை மனு அளித்த உடனேயே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நிறைவேற்றியுள்ளாா். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். ... மேலும் பார்க்க

மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் பலா் இணைந்தனா்.புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த பசுபதி பாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அவற்றிலிருந்... மேலும் பார்க்க

நெல்லையில் விபத்து: களக்காடு முதியவா் பலி

திருநெல்வேலியில் நேரிட்ட சாலை விபத்தில் களக்காடு பகுதியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.களக்காடு அருகேயுள்ள கோவில்பத்து செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் சுயம்புலிங்கம் (57). ஜவுளி கடை ஊழியரான இவா், இ.எ... மேலும் பார்க்க