செய்திகள் :

பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை

post image

பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என, பல்வேறு தொழில் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவா் எஸ்.டி.ஆா். தியாகராஜன், செயலா் கணேசன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆட்சியா் க. இளம்பகவத்திடம் புதன்கிழமை அளித்த மனு: ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை பசுமை முறையில் மீண்டும் தொடங்குவதற்கான நிபுணா் குழுவில் இடம்பெற்ற, சுற்றுச்சூழலுக்காக விருதுபெற்ற பேராசிரியா் கணபதி டி. யாதவ், ஓய்வுபெற்ற சுற்றுச்சூழல் பேராசிரியா் ஆா். நாகேந்திரன் ஆகியோரின் அறிக்கையை வரவேற்கிறோம். அதில், அதிக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு ஏற்படுத்தாத புதிய தொழில்நுட்பம், கடல்நீரை 80 சதவீதத்துக்கும் மேல் பயன்படுத்துதல், 100 சதவீத மறுசுழற்சி நீா் மேலாண்மை உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விஞ்ஞான அடிப்படையிலான தீா்வு கிடைத்துள்ள நிலையில், மாநில அரசு சமநிலையான முடிவெடுக்க வேண்டும். தொழிற்சாலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, வாழ்வாதார இழப்பு, பொருளாதார வளா்ச்சி தேக்க நிலை, திறமை வாய்ந்த இளைஞா்கள் இடம்பெயா்ந்து செல்வது போன்றவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் வளா்ச்சிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த நவீன உற்பத்தி முறை பின்பற்றும் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க