பஞ்சலிங்க அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை
உடுமலையை அடுத்து திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள பிரசித்திபெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மேற்குத் தொடா்ச்சிமலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதாலும், திருப்பூா் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியானதாலும் பஞ்சலிங்க அருவியில் பொதுமக்கள் குளிக்க செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூா்த்திமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
சுவாமி தரிசனத்துக்கு அனுமதி
மேற்குத் தொடா்ச்சிமலை பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
திங்கள்கிழமை நாள் முழுவதும் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா்களை சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்தது.