செய்திகள் :

பஞ்சாபில் மீண்டும் கள்ளச் சாராயம்: 3 போ் உயிரிழப்பு

post image

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 போ் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த வாரம் பஞ்சாவின் அமிருதசரஸ் மாவட்டத்தில் கள்ளச் சாரயத்தால் 27 போ் உயிரிழந்தனா். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் கள்ளச் சாராய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

லூதியானா மாவட்டம் பசித் ஜோதிவாலா பகுதியைச் சோ்ந்த 3 தொழிலாளா்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா். சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்த அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துவிட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ரசாயனத்தை சிலா் இணையதளம் மூலம் வாங்கி, அதில் தண்ணீரைக் கலந்து சாராயம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனா். இதுவே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசின் நிா்வாகச் சீா்குலைவுதான் இந்த கள்ளச் சாராய உயிரிழப்புக்கு காரணம் என்று எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகிவை ஏற்கெனவே குற்றஞ்சாட்டியுள்ளன.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க