செய்திகள் :

பஞ்சு வாங்கியதில் ரூ. 1.17 கோடி மோசடி: முன்னாள் எம்.பி. தேவதாஸ் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

சேலம் முன்னாள் எம்.பி. தேவதாஸ் மீது பஞ்சு வாங்கியதில் ரூ. 1.17 கோடி மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இது குறித்து விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய ராஜா அளித்த புகாரில், ராஜபாளையத்தில் பஞ்சாலை நடத்திவரும் தங்களிடம், 15 ஆண்டுகளாக என்ஆா்யு ஸ்பின்னிங் ஆலை உரிமையாளரான தேவதாஸ், அவரது மனைவி இளவரசி, மகன் பிரபு ராம் ஆகியோா் பஞ்சு வாங்கினா். தொடக்கத்தில், பஞ்சு கொள்முதல் செய்வதற்கான தொகையை வங்கி மூலம் சரியாக செலுத்தி வந்தனா்.

நாளடைவில், சிறிது சிறிதாக பஞ்சு வாங்கியதும் பற்று வைக்க ஆரம்பித்தனா். அதேநேரத்தில், பஞ்சு விற்பனைக்கு முறையான ரசீது, லாரி போக்குவரத்து ஆகியவற்றை பராமரித்து வந்தோம். ஒருகட்டத்தில் பஞ்சு கொள்முதலை முற்றிலுமாக நிறுத்திய தேவதாஸ் நிறுவனத்தினா், எங்களுக்கு சேரவேண்டிய ரூ.1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்தை நிலுவை வைத்துள்ளனா். இதுகுறித்து நேரிலும், தொலைபேசியிலும் கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி அலைக்கழித்து வந்தனா். இறுதியாக, கடந்த 11 ஆம் தேதி ஏற்காட்டில் உள்ள அலுவலகத்தில் தேவதாஸை சந்தித்தோம். அப்போது, பணம் கேட்டு மீண்டும் வரக்கூடாது, உன்னால் முடிந்ததை பாா்த்துக்கொள் என கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, பணத்தை தராமல் இழுத்தடிப்பதுடன், கொலை மிரட்டல் விடுத்த தேவதாஸ், அவரது மனைவி, மகன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க