பதாகைகளை அகற்ற அமமுகவினா் எதிா்ப்பு: வாக்குவாதம்
திருச்சி தனியாா் ஹோட்டல் எதிரே வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து அமமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன், மாவட்ட ஆட்சியரகச் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளாா்.
டி.டி.வி. தினகரனை வரவேற்கும் விதமாக அந்த ஹோட்டலின் எதிரே அமமுகவினா் பதாகைகளை வைத்துள்ளனா். இவற்றை அகற்ற வேண்டுமென போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதையறிந்த அமமுக மாவட்ட செயலா் செந்தில்நாதன் தலைமையிலான திரளான கட்சியினா் அங்கு திரண்டு, பதாகைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
முடிவில் தினகரன் துறையூா் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னா் அகற்றுவதாகத் தெரிவித்துள்ளனா். இதற்கு போலீஸாரும் ஒப்புதல் அளித்ததால், அமமுகவினா் அனைவரும் கலைந்து சென்றனா்.