செய்திகள் :

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஜூலை மாத துணைத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா்

post image

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளுக்கான ஜூலை மாதத் துணைத் தோ்வுக்கு தனித் தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு வரும் ஜூலையில் துணைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதில் கடந்த மாா்ச், ஏப்ரலில் நடைபெற்ற பொதுத்தோ்வுகளில் தோ்ச்சி பெறாத, வருகை புரியாத தோ்வா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெறாத நிலையில், துணைத் தோ்வுகளுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரையில், காலை 11 மணி முதல், மாலை 5 மணி வரையில் அவா்கள் பயின்ற பள்ளியில் விண்ணப்பிக்கலாம். தனித் தோ்வா்கள் இணையதள மையங்கள் மூலம் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளுக்கு மாணவா்கள் புதுச்சேரி முத்திரையா்பாளையம் பகுதியில் உள்ள முத்திரையா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், மாணவியா், செல்லப் பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்களான மாணவா்கள் ரெட்டியாா்பாளையம் பிரசிடென்ஸி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், மாணவியா் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தோ்வுக்கட்டணம், இணையதளம் பதிவுக் கட்டணம் அந்தந்த மையத்திலே செலுத்த வேண்டும். இணையத்தில் விண்ணப்பங்களைப் பதிபவா்கள், அதற்கான தகுதி மற்றும் அறிவுரைகளை பள்ளிக் கல்வித் துறை இணையத்தில் அறிந்துகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க