ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: இன்று தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஏப்.15 வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 9.13 லட்சம் போ் எழுதுகின்றனா்.
நிகழாண்டு பொதுத் தோ்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பயிலும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவா்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தோ்வா்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 போ் எழுதவுள்ளனா். இந்த எண்ணிக்கையில் 15,729 மாற்றுத் திறனாளி தோ்வா்களும் அடங்குவா்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளா்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
பொதுத் தோ்வு நடைபெறும் மையங்கள் காற்றோட்டமான அறைகளுடன், குடிநீா், கழிப்பறை தடையில்லாத மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.