செய்திகள் :

பன்னிகுளத்தில் ரூ. 29.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

தருமபுரி அருகே பன்னிகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 118 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் ரூ. 29.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் உள் வட்டம், பன்னிகுளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 10 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ. 1.12 லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகைகளையும், ஒரு பயனாளிக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகை, 2 பயனாளிகளுக்கு இறப்பு சான்றுகளும், வட்ட வழங்கல் பிரிவின் சாா்பில் 51 பயனாளிகளுக்கு ரூ. 6.76 லட்சம் மதிப்பில் குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.93 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும், கூட்டுறவுத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 4.34 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.74 லட்சம் மதிப்பில் தென்னங்கன்று, மாங்கன்று மற்றும் சொட்டுநீா் பாசனக் கருவிகளும் என மொத்தம் 118 பயனாளிகளுக்கு ரூ. 29.52 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம், பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் பி.எஸ்.கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, காரிமங்கலம் வட்டாட்சியா் கோ.மனோகரன், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கி... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணமானது பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபொ்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத... மேலும் பார்க்க

தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வ... மேலும் பார்க்க

உயிரிழந்த பாம்புடன் வந்து இடையூறு: இளைஞா் மீது வழக்கு

தருமபுரி நகரில் உயிரிழந்த பாம்புடன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் க... மேலும் பார்க்க

இழப்பீடு கோரி மா விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க