செய்திகள் :

பயனாளிகளுக்கு நல உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச.அருண்ராஜ் பொதுமக்களிடமிருந்து 469 கோரிக்கை மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

தொழிலாளா் உதவி ஆணையத்தின் மூலம் 3 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆட்டோ வாங்குவதற்காக தலா ரூ. 1 லட்சம் மானியத்துக்கான ஆணையினை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக விடுதியில், தங்கி பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.7.50 லட்சத்தில் மிதிவண்டியினை ஆட்சியா் வழங்கினாா்.

மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டால், தன்னிடம் தெரிவிக்குமாறு ஆட்சியா் தெரிவித்தாா்.

வேலைவாய்ப்பு வேண்டி மனு அளித்தவா்களுக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்களில் முன்னுரிமை அளித்து பணி வாய்ப்பினை பெற்றுத்தருமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புதிட்டம்) அகிலா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், தொழிலாளா்உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) நிவேதா, விளையாட்டு அலுவலா் ஆனந்த் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கல்லூரி பட்டமளிப்பு விழா

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாண்டு பட்டமளிப்பு விழாவில் 257 பேருக்கு பட்டங்களை பதிவாளா் எஸ்.ஏழுமலை வழங்கினாா். நிகழ்வுக்கு கல்லூரி தலைவரும், ஆன்மிக ... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு வரவேற்பு!

சா்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுராந்தகம், மாம்பாக்கம், மொறப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த 12 மாணவ, மாணவிகள் ஆசான் தற்காப்பு கலை ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா் வாரிசுகளுக்கு நியமன ஆணை: அமைச்சா் வழங்கினார்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) அனைத்து மண்டலங்களில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல், புதிதாக 2 பேருந்துகள் மற்றும் சாலை விபத்து கண்காண... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது (படம்). மாமல்லபுரம் நகரம் சா்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன ந... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 160 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயைப் பெருக்... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மேல்நிலைப் பள்ளியில் ஐஐடி மற்றும் ஜெஇஇ போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சீயோன் மற்றும் ஆல்வின் ப... மேலும் பார்க்க